Friday 19 July 2013

சனிக்கிழமை, மகாபிரதோஷம்






பிரதோஷம்: அனைத்து தோஷங்களும் ஒடுங்கும் காலம் என்று பொருள் .

தேய்பிறை திரயோதசி சனிக்கிழமை ஆகியவை கூடியிருந்தால் மகாபிரதோஷம்.சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த மகாபிரதோஷம்.

தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான ஒன்றரை மணி நேரம் பிரதோஷ காலமாகும்.

இந்த நேரத்தில் சிவபெருமானை தரிசிப்பது மிக விசேஷமானது.

பதினொரு பிரதோஷங்கள் தரிசனம் செய்தல் ஒரு முழு கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்த பலன் கிடைக்கும். பாவமே செய்து கொண்டு பிரதோஷம் செய்வதால் ஒரு புண்ணியமில்லை.

பிரதோஷ நேரம் சூரிய அஸ்தமனத்துக்கு முன்னும் பின்னும் ஒன் அரை (1-1/2) மணி நேரம் மணிநேரம்.

ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது.

சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை.

எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.

thirumayam kottail ulla nanthi 

No comments:

Post a Comment