Saturday, 20 July 2013

காசியில் குளித்தால் பாவம் போகுமா?




இறைவனும் இறைவியும் ஒரு நாள் வான வீதியில் போகும்போது, காசிக்கு மேலே போக வேண்டியதா இருந்துச்சு. காசியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து குளிக்கிறதை பார்த்த பார்வதி தேவி, பரமசிவன் கிட்டே, "சுவாமி... இங்கே பல்லாயிரக் கணக்கான மக்கள் வந்து தினமும் பாவம் போகும்னு நம்பி குளிக்கிறாங்க. அப்படியிருக்க இவங்கள்ல நிறைய பேர் இறந்த பிறகு நரகத்துக்கு வர்றமாதிரி எனக்கு தெரியுதே... இவங்க பாவமெல்லாம் போன மாதிரி தெரியலியே... மக்களை இப்படி நாம ஏமாற்றலாமா? இது நியாயமா?" என்று கேட்கிறார்.
அதற்கு சிரித்துக்கொண்ட பதிலளித்த இறைவன், "தேவி... இங்கே வந்து போறவங்க நிறைய பேர் உண்மையில் கங்கையில் ஸ்நானம் பண்றது இல்லே. அவங்க தங்களோட உடம்பை தண்ணியில நனைக்கிறாங்க. அவ்ளோ தான்."
"புரியலையே சுவாமி...!"

"கொஞ்ச பொறு... நான் உனக்கு விளக்குகிறேன்" என்று கூறி, பார்வதியை அழைத்துக்கொண்டு காசி படித்துறை அருகே வந்தார் ஈசன். இருவரும் ஒரு முதிய தம்பதி போன்ற வேடத்துக்கு மாறினார்.

கங்கையில் நீராடிவிட்டு வரும் வழியில் உள்ள பாதை ஓரத்தில் உள்ள பெரிய சாக்கடை நீர் நிரம்பிய ஒரு குழியை காட்டி இறைவன், "தேவி... நான் கீழே காணப்படும் அந்த படுகுழியில் விழுந்துவிடுகிறேன். நீ கூச்சல் போட்டு நான் சொல்வது போல சொல்லி எல்லோரையும் உதவிக்கு கூப்பிடு...!" என்கிறார்.

உடனே உமா தேவியும் அப்படியே "ஐயோ காப்பாற்றுங்கள். ஐயோ காப்பாற்றுங்கள்.... என் கணவர் இந்த குழியில் விழுந்துவிட்டார்..." என்று அபயக்குரல் எழுப்பினார்.

வயதான மூதாட்டியின் கூக்குரலை கேட்டு அநேகர் ஓடி வந்தனர்.

"ஐயா... என் கணவர் தள்ளாடியபடி நடந்து வரும்போது இந்த குழியில் விழுந்துவிட்டார் ஐயா. யாராவது இறங்கி சென்று அவரை காப்பாற்றுங்களேன்..." என்று அழுதபடி கெஞ்சுகிறார்.

"என்ன இது இப்போ தானே கங்கையில் ஸ்நானம் செய்துவிட்டு வந்தோம். போயும் போயும் இந்த சாக்கடை குழியில் இறங்குவதா?" என்று முகம் சுளித்த படி பலர் சென்றுவிட்டனர்.

இன்னும் சிலர், இரக்கப்பட்டு வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு சென்றனர்.

மனசாட்சியுள்ள ஓரிருவர் உதவ முன்வந்தனர். அவர்கள் குழியில் இறங்க எத்தனித்த போது, பார்வதி அவர்களிடம், "நில்லுங்கள. பாபங்களே செய்யாதவர்கள் தான் என் கணவரை காப்பாற்ற வேண்டும். உங்களில் எவருக்கு உங்கள் ஜென்ம கணக்கில் பாவங்கள் இல்லையோ அவர்கள் மட்டுமே இறங்குங்கள்!" என்று கூற, அனைவரும் "எங்கள் கணக்கில் பாவங்கள் இல்லாமலா? வாய்ப்பேயில்லை. நாங்கள் நிறைய பாவங்கள் செய்திருக்கிறோம். மன்னித்து கொள்ளுங்கள் தாயே" என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர்.

இப்படியே பொழுது கழிந்துகொண்டிருக்க, காசியில் நீராடிவிட்டு வந்த எவராலும் உதவ முடியவில்லை.

கடைசீயில் ஒரு இளைஞன் வந்தான். அவன் மூதாட்டி (பார்வதி) கூறியதை கேட்டபிறகும் துணிவுடன் இறங்கினான். "நில்லுப்பா. நான் சொன்னதை கேட்டாய் அல்லவா?" உன்கணக்கில் பாவமே இல்லையா?"

"ஆம் தாயே. நேற்றுவரை என் கணக்கில் அனேக பாவங்கள் இருந்தன. ஆனால், நான் தற்போது தான் கங்கையில் புனித நீராடிவிட்டு வருகிறானே. கங்கையில் நீராடினால் பாபங்கள் தொலையும் என்பது சாஸ்வதம். அப்படியிருக்க என் கணக்கில் எப்படி பாவங்கள் இருக்கும்? என்றான்.




இறைவன் இறைவியை பார்த்து "இப்போது புரிந்ததா தேவி? நரகில் ஏன் கூட்டம் அதிகமாக வருகிறது...!" என்று புன்முறுவல் செய்கிறார்.

இளைஞனின் பதிலால் மகிழ்ந்த இறைவனும் இறைவியும், அவனுக்கு தரிசனம் தந்து வாழ்த்திவிட்டு மறைந்தனர்.

இந்த கதையை யார் சொன்னது என்று பார்க்கிறீர்களா? பகவான் ஸ்ரீ ராம கிருஷ்ணா பரமஹம்சரை தவிர வேறு யார் இந்த கதையை கூறியிருக்க முடியும்....!

இதுபோல தான், நாம் சடங்குகளை ஏதோ ஒப்புக்கு செய்யாது, அவற்றின் உண்மை தத்துவத்தை உணர்ந்து நம்பிக்கையுடன் செய்தால் மட்டுமே பலன் கிட்டும். சரியா நண்பர்களே...?

தென்னாடுடைய சிவனே போற்றி

n

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஆனால் இங்கே மாணிக்கவாசகரோ எந்நாட்டவர்க்கும் இறைவா என்றுக் கூறினாலும், இறைவனை தென்னாடுடையவன் என்று சிறப்பாகக் கூறுகின்றார். அவரின் இந்தக் கூற்று சரியான ஒன்றா?

மாணிக்கவாசகர் தமிழகத்தை சேர்ந்தவர்… அதனால் அவர் ’தென்னாடுடைய சிவனே’ என்று கூறி இருக்கின்றார்… இதுவே ஒரு வடநாட்டினைச் சேர்ந்த ஒருவர் எழுதி இருந்தால் அவர் ‘வடநாட்டினை உடைய சிவனே” என்று தான் கூறி இருப்பார். அப்படி என்றால் இறைவன் வடநாட்டினை மட்டும் சேர்ந்தவர் ஆகி விடுவாரா?… இறைவன் முழு உலகத்திற்கும் உடையவர்” என்றுக் எண்ணுகிறீர்களா

ஒருக் கருத்து உண்மையான கருத்து ஆக வேண்டும் என்றால் அது எல்லா நிலையிலிலும் நிலைத்து நிற்க வேண்டும்.எல்லா நிலைக்கும் பொருந்த வேண்டும். இப்பொழுது ‘தென்னாடுடைய’ என்னும் சொல் ‘தெற்குத் திசையில் உள்ள ஒரு நாட்டினைக்’ குறிப்பதாக இருந்தால் அந்த நாடு இடத்திற்கு இடம் மாறுபடுவதாக அமைந்து விடும்.

சீனத்திற்கு தென்னாடு வடஇந்தியா.

வடஇந்தியாவிற்கு தென்னாடு தமிழகம்.

தமிழகத்திற்கு தென்னாடு ஆப்பிரிக்கா.

இப்படியே அந்தக் கருத்து அர்த்தமில்லாத ஒருக் கருத்து ஆகி விடும். எனவே மாணிக்கவாசகர் அந்த அர்த்தத்தினில் ’தென்னாடுடைய’ என்னும் சொல்லினை பயன் படுத்தவில்லை.

மாணிக்கவாசகர் ’தென்னாடுடைய’ என்னும் சொல்லினை ‘தென்னவனின் நாட்டினைச் சிறப்பாக உடைய’ என்னும் அர்த்தத்தினில் பயன் படுத்தி இருக்கின்றார்.

‘தென்னவனின் நாடா???”

சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

தென்னவன் என்றச் சொல் பாண்டியனைக் குறிக்கும். பாண்டியன் என்பதின் அர்த்தம் ‘பழைய நாட்டினை ஆண்ட மன்னன்’ என்பதே ஆகும். ‘பாண்டி’ என்றால் ‘பழைய’ என்றும் தமிழில் அர்த்தம் இருக்கின்றது.

எனவே ‘தென்னாடு’ என்றால் ‘பாண்டியனால் ஆளப்பட்ட பழைய நாடே ஆகும்’. சிவன் அந்த நாட்டினில் சிறப்பாக இருக்கின்றார் என்றே மாணிக்கவாசகர் கூறுகின்றார்.

“பழைய நாடா ?” - பாண்டியன் மதுரையை அல்லவா ஆண்டான் என்று கூறுபவர்களுக்கு, இப்பொழுது இருக்கும் மதுரை மூன்றாவது மதுரை. இதற்கு முன்னர் இருந்த இரு மதுரைகள் கடற்கோள்களினால் அழிந்துப் போயின. அது வரலாறு!!! குமரிக்கண்ட வரலாறு!!! மாணிக்கவாசகர் ‘தென்னாடு’ என்றுக் குறிப்பிடுவதும் இந்த குமரிக்கண்டத்தையேதான்.
ஏன் சிவனை ‘குமரிக்கண்டத்தை சிறப்பாக உடையவன்’ என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.

Friday, 19 July 2013

சனிக்கிழமை, மகாபிரதோஷம்






பிரதோஷம்: அனைத்து தோஷங்களும் ஒடுங்கும் காலம் என்று பொருள் .

தேய்பிறை திரயோதசி சனிக்கிழமை ஆகியவை கூடியிருந்தால் மகாபிரதோஷம்.சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த மகாபிரதோஷம்.

தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான ஒன்றரை மணி நேரம் பிரதோஷ காலமாகும்.

இந்த நேரத்தில் சிவபெருமானை தரிசிப்பது மிக விசேஷமானது.

பதினொரு பிரதோஷங்கள் தரிசனம் செய்தல் ஒரு முழு கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்த பலன் கிடைக்கும். பாவமே செய்து கொண்டு பிரதோஷம் செய்வதால் ஒரு புண்ணியமில்லை.

பிரதோஷ நேரம் சூரிய அஸ்தமனத்துக்கு முன்னும் பின்னும் ஒன் அரை (1-1/2) மணி நேரம் மணிநேரம்.

ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது.

சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை.

எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.

thirumayam kottail ulla nanthi 

Thursday, 18 July 2013

தில்லை காளியம்மன் ஆலய வரலாறு


ஒரு முறை தேவ லோகத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஒரு வாக்குவாதம் ஏற்படுகின்றது. அது நீ பெரியவனா இல்லை நான் பெரியவளா எனத் துவங்கிய சண்டை சக்தி இல்லையேல் சிவனும் இல்லை என பார்வதி வாதாடும் நிலைக்குப் போக கோபமுற்ற சிவபெருமான் பார்வதியை கோர உருவம் கொண்ட காளியாக மாறுமாறு சாபம் தந்து விடுகிறார். சிவனை விட்டுப் பிரிய மனமில்லாத பார்வதி அழுது புலம்பி தன்னை மன்னித்து விடுமாறு அவரை கேட்டுக் கொண்டப் பின் சாப விமோசனம் பெற்று மீண்டும் அவரை எப்படி அடைவது எனக் கேட்க அதற்கு சிவபெருமான் கூறினார் "இன்னும் சிறிது காலத்தில் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் போர் நடக்க உள்ளது. அந்த நேரத்தில் நீ இதே காளி உருவில் தேவர்களுக்காக போரிட்டு அசுரர்களை அழிப்பாய். அப்போது நீ தில்லை மரங்கள் சூழ்ந்த தில்லைக்கு வந்து என்னை நினைத்து தவம் இருக்க வேண்டும். அப்போது ஒரு கட்டத்தில் உன்னுடன் சேர்ந்து நடனமாடி உன்னை என்னுடன் மீண்டும் அழைத்துக் கொள்வேன்".
காலம் ஓடியது. தாரகாசுரன் என்ற அசுரன் தோன்றி தேவர்களை துன்புறுத்தி வரலானான். தேவர்களும் ரிஷி முனிவர்களும் மும்மூர்த்திகளிடம் சென்று அவன் தொல்லையில் இருந்து தம்மை காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து சிவபெருமானிடம் ஆலோசனைக் கேட்க அவர் காளி உருவில் இருந்த பார்வதியை அதற்கு அனுப்பினார். காளி உருவில் இருந்த பார்வதி யுத்தகளத்துக்குச் சென்றாள். தாரகாசூரனையும் அவன் சேனையும் அழித்தப் பின் வெற்றி அடைந்தாள். ஆனால் அவனை வெற்றி கொண்டபின்னும் அவள் கோபம் அடங்கவில்லை. வெறியாட்டம் போல ஊழித்தாண்டவம் ஆடத் துவங்கினாள்.
தாரகாசுரன் அழிந்தாலும் முனிவர்களின் தொல்லை தொடர்ந்தது. அவர்கள் சிவபெருமானிடம் மீண்டும் சென்று வேண்டினார்கள். அனைவரும் சிவபெருமானையே மீண்டும் மீண்டும் தஞ்சம் அடைவது காளிக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவளுக்கு சிவபெருமான் மீது கோபம் ஏற்பட்டது. அவரை விட தானே பெரியவள் என முன்னர் கொண்டு இருந்த எண்ணம் இன்னமும் குறையவில்லை. வெறியும் அடங்கவில்லை. அவளுடைய உக்ரஹத்தினால் அனைத்து முனிவர்களும் ரிஷிகளும் சொல்லொண்ணத் துயருக்கு ஆளாகினார்கள்.
அந்த நேரத்தில் அங்கு இருந்த வியாக்கிரபாதர் மற்றும் பதஞ்சலி முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று சிவபெருமான் அவர்களுக்கு தில்லையில் திருநடனக் காட்சி தந்தார். அதை மெச்சி அனைவரும் அமர்ந்து இருந்த வேலையில் காளி சிவனை நடனப் போட்டிக்கு அழைத்தாள். போட்டியில் யார் தோற்றாலும் அந்த ஊரின் எல்லைக்கு சென்று விட வேண்டும் என்பது நிபந்தனை. நடனம் துவங்கியது. அனைத்து தேவர்களும் கடவுட்களும் இசை ஒலிகளை எழுப்ப காளி மற்றும் சிவபெருமானின் நடனப் போட்டி தொடர்ந்தது. வெற்றித் தோல்வியை நிர்ணயிக்க முடியாமல் அனைவரும் திகைத்து நின்றபோது சிவபெருமான் ஊர்த்துவத் தாண்டவம் என்பதை ஆடிக் காட்டினார். அதில் அவர் தனது காலால் கீழே விழுந்த குண்டலத்தை எடுத்து காலை மேலே தூக்கி தனது காதில் அணிந்து கொள்ள அதே ஊர்த்துவத் தாண்டவத்தை பெண்ணான காளியினால் செய்ய முடியாமல் நாணம் தடுத்தது. பெண்ணினால் எப்படி காலை மேலே தூக்கிக் காட்டுவது? அதனால் போட்டியில் தோற்றுப் போனாள்.
போட்டியில் தோற்று போனதும் அவமானம் அடைந்தவள் ஊர் எல்லைக்குச் சென்று உக்ரஹமாக வட எல்லைக் காளியாக அமர்ந்தாள். அதைக் கண்ட அனைவரும் அதிர்ந்து போனார்கள். சக்தி இல்லையேல் சிவனும் இல்லை. இருவரும் இணைந்து இல்லாதவரை பிரபஞ்சம் எப்படி இயங்கும் என கவலைப்பட அனைத்து தேவர்களும், மகாவிஷ்ணுவும் பிரும்மாவும் ஒன்று சேர்ந்து காளியிடம் சென்று அவளை சாந்தமடையுமாறு வேண்டிக் கொண்டனர். பிரும்மா அங்கேயே அமர்ந்து கொண்டு காளியை புகழ்ந்து வேதங்களை ஊதி அவளை பூஜிக்க அவர் பூஜையை ஏற்றுக் கொண்ட காளி பிரும்மசாமுண்டேஸ்வரி என்ற பெயரால் நான்கு முகம் கொண்ட சாந்தநாயகி ஆகி அதே இடத்தில் இன்னொரு சன்னதியில் சென்று அமர்ந்தாள்.
ஆக அந்த ஆலயத்தில் ஒரு சன்னதியில் உக்ரஹ காளி தேவியாக பல ஆயுதங்களையும் ஏந்திய எட்டுக் கைகளைக் கொண்ட தில்லைகாளியாகவும் இன்னொரு சன்னதியில் சாந்தமான நான்கு முக பிரும்மசாமுண்டேஸ்வரி அம்மனாகவும் காட்சி தந்தவாறு பக்தர்களை ரட்சித்து வருகிறாள். காளி சொரூபத்தில் உள்ளவள் பில்லி சூனியப் பேய்கள், சினம், பகை, கொடிய வியாதிகள், ஆணவம், அகம்பாவம் போன்றவற்றை அழித்து வருகிறாள். சாந்தமான பிரும்மசாமுண்டேஸ்வரி கல்வி, ஐஸ்வர்யம் , வீரம் போன்ற அனைத்தையும் அளித்து வருகிறாள்.
இந்த ஆலயத்தை பன்னிரெண்டாம் நூற்றாண்டில் அதாவது 1229 AD மற்றும் 1278 AD ஆண்டுகளில் கோபெருங்ஜிங்கன் என்ற மன்னன் கட்டினான் என்று தெரிகின்றது. அந்த காலத்தில் நடைமுறையில் இருந்த பழக்கத்தின்படி போரில் வெற்றி அடைவதற்காக தமது தலையையே தருவதாக வேண்டிக் கொண்ட படையினர் சிலர் போர்களில் வெற்றிப் பெற்றப் பின் அங்கு வந்து தமது தலைகளையே வெட்டிக் கொண்டு மரணம் அடைந்ததாக வாய்மொழிக் கதைகளும் உள்ளதாம்.
ஆலயம் மிகப் பெரியது அல்ல ஆனால் மிகப் பழமையானது. உள்ளே நுழைந்ததும் வலது பக்கத்தில் உள்ள தனி சன்னதியில் ஆனந்த நர்த்தனமாடும் விநாயகரும், இடதுபுற தனிச் சன்னதியில் முருகனும் கிழக்கு திசையை நோக்கிப் பார்த்தவாறு இருந்து கொண்டு பக்தர்களை காத்து அருளுகிறார்கள். முதல் மண்டபமான தியான மண்டபத்தின் இரண்டு பக்கங்களிலும் அலுவலக அறைகள் உள்ளன. தியான மண்டபத்தில் பக்தர்கள் நெய் விளக்குகளை ஏற்றி தேவிகளை ஆராதிக்க விளக்கு பீடமும் வைக்கப்பட்டு உள்ளது. அடுத்த மண்டபத்தில் உள்ள சன்னதிகளில் நாம் காணுவது கிழக்கு நோக்கி தனி சன்னதியில் அமர்ந்து உள்ள தில்லைக் காளி அம்மனும் மேற்கு நோக்கி அமர்ந்து உள்ள பிரும்ம சாமுண்டியும் ஆவர்கள். அவர்கள் அங்கு அமர்ந்தவாறு பக்தர்களை ரட்சித்து கொண்டு உள்ளனர். அந்த மண்டப நுழை வாயிலில் இருபுறமும் பிரும்மாண்டமான காவல் தேவதைகள் நின்று கொண்டு உள்ளார்கள். சுவறுகளில் சில கல்வெட்டுக் குறிப்புகள் காணப்படுகின்றன.
தில்லை காளியம்மனுக்கு வெள்ளைப் புடவையை மட்டுமே சாத்துகிறார்கள். தினமும் அவளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் மட்டுமே நடைபெறுகின்றது. காளி சாந்தம் அடையக்கூடாது என்பதற்காக உஷ்ணம் தரும் எண்ணையான நல்லெண்ணை மட்டுமே உபயோகிக்கின்றார்களாம். உடம்பு முழுவதும் மஞ்சளினால் ஆன குங்குமம் கொட்டப்பட்டு ( அதைக் காப்பிடுதல் என்று கூறுகிறார்கள்) வெள்ளைப் புடவையால் உடல் மறைக்கப்பட்டு உள்ளது. கண்கள் மட்டும் ஜொலிக்கும் வகையில் வெள்ளை நிறத்தில் காட்சி தருகின்றது. தில்லை காளியை அந்த கோலத்தில் மட்டுமே தரிசிக்க முடிந்தது. (படத்தைப் பார்க்கவும்). அவள் சன்னதிக்கு பக்கத்திலேயே அவளை ஆராதித்து தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள விளக்கு பீடமும் வைக்கப்பட்டு உள்ளது. அந்த சன்னதியில் தில்லை காளியை தரிசிப்பவர்கள் கண்டிப்பாக அவள் உக்ரஹமான கண்களை உற்று நோக்கி அவளை வேண்டிக் கொண்டால்தான் பலன் உண்டு. ஆனால் அதற்கு மாறாக பிரும்ம சாமுண்டிக்கோ அனைத்து விதமான அலங்காரங்களும் செய்யப்பட்டு தேன், பால், போன்ற அபிஷேகங்களும் செய்யப் படுகின்றனவாம்.
அவள் சன்னதிக்கு பக்கத்தில் சுமார் ஆறு அல்லது ஐந்து அடி உயரமும் நான்கு அல்லது ஐந்து அடி சுற்றளவும் கொண்ட மிகப் பெரிய நாகதேவர் சிலை உள்ளது. காளியை வணங்கியப் பின் அவரையும் வணங்க வேண்டுமாம். அதன் பக்கத்திலேயே போர் வீரர்கள் தமது தலைகளை வெட்டிக் கொண்டு பலி தந்தக் காட்சியைக் காணலாம்.
 

Monday, 15 July 2013

தமிழகத்தின் மிகப் பெரிய பிஸினஸ் சமூகம்

நகரத்தார்கள் என்னும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் இன்று தமிழகத்தின் மிகப் பெரிய பிஸினஸ் சமூகமாக விளங்குகின்றனர். தமிழ்நாட்டில் இன்றைக்கு மிகப் பெரிய நிறுவனமாக விளங்கும் சோழமண்டலத்தை நடத்தி வருபவர்கள் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். செட்டி நாடு குழுமமும் ஸ்பிக் நிறுவனமும் நகரத்தாரின் பிஸினஸ் திறமைக்குப் பெருமை சேர்க்கும் வேறு சில உதாரணங்கள். இவை தவிர, இன்னும் பல நிறுவனங்கள் தமிழகம் முழுக்க லாபகரமாகச் செயல்பட்டு வருகின்றன.

இந்த வளர்ச்சியானது ஏதோ ஐம்பது, நூறு ஆண்டுகளில் வந்துவிடவில்லை. கடந்த பல நூற்றாண்டுகளாகவே பிஸினஸ் துறையில் நகரத்தார் சமூகத்தினர் தொடர்ந்து இருந்து வருவதாலேயேதான் இன்றைக்கு தலைசிறந்த பிஸினஸ் சமூகமாக இருக்க முடிகிறது. அதிலும் குறிப்பாக, 17, 18-ம் நூற்றாண்டுகளில் இந்த சமூகம் கண்ட மிகப் பெரிய மாற்றமே இன்றைய நவீன பிஸினஸ் உலகில் முன்னணியில் இருக்கத் தேவையான அறிவையும் அனுபவத்தையும் தந்திருக்கிறது. அந்த வரலாற்றுப் பின்னணியைக் கொஞ்சம் பார்ப்போம். 

பதினாறாம் நூற்றாண்டு வரை மதுரையை ஆண்டு வந்தது விஜய நகரப் பேரரசு. நாயக்க மன்னர்களின் நேரடி ஆட்சியில் இருந்த மதுரையை முகலாய மன்னர்கள் பிடித்தனர். ஆனால், தஞ்சாவூர் மட்டும் மராட்டிய மன்னர்களின் ஆதிக்கத்திலேயே இருந்தது. இதற்கிடையே டச்சுக்காரர்களும், பிரெஞ்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் தமிழகத்தில் காலடி எடுத்து வைத்தனர்.


ஆட்சி அதிகாரத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம், பிஸினஸ் உலகிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தது. குறிப்பாக, ஏற்றுமதி என்கிற புதிய விஷயம் வேகமாக நடக்க ஆரம்பித்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கிரேக்கத்திற்குச் சென்று பொருட்களை விற்றுவிட்டு வந்ததாக சங்க இலக்கியங்கள் சொன்னாலும் பெரிய அளவில் இது வளரவில்லை. ஆனால், ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள் நம் நாட்டுக்கு வந்த பிறகு இங்கிருந்து பெருமளவிலான பொருட்களை கொண்டு செல்ல ஆரம்பித்தனர்.

இதன் காரணமாக பல பொருட்களுக்கு புதிய தேவை பிறந்தது. அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது உப்பு. கடலை ஒட்டியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் உப்பளங்கள் இருந்தன என்றாலும், ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரை உள்ள உப்பளங்களில் இருந்து தயாரிக்கப்படும் உப்பு இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இலங்கைக்கும் கொண்டு சென்று விற்கும் பிஸினஸ் சூடு பிடித்தது. இந்தத் தொழிலில் இறங்கி, ஒரு காலகட்டத்தில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர் நகரத்தார்கள்.

இதற்கடுத்து அரிசி வியாபாரம். நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் உற்பத்தியான அரிசியை தென் மாநிலங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்வதற்கும், இலங்கைக்கும் கொண்டு சென்று விற்கிற பிஸினஸிலும் நகரத்தார்கள் பெரும்பங்கு வகித்தனர்.

ஆனால், இங்கிலாந்து நாட்டுக்காரர்களுக்கு இந்த பொருட்கள் மீதெல்லாம் அதிக நாட்டமில்லை. இங்கிருந்து அவர்கள் அதிகம் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தது பருத்தியைத்தான். தமிழகத்தில் கோவை உள்பட பல பகுதிகளில் பருத்தி உற்பத்தி அமோகமாக இருந்ததைக் கண்டு அதிசயித்துப் போனார்கள் ஆங்கிலேயர்கள். அவர்களுக்கு நிறைய பருத்தி தேவையாக இருந்தது. பருத்தியை துணிகளாக நெய்யும் இயந்திரங்களையும் அவர்கள் உருவாக்கி இருந்தனர். இங்கிருந்து பருத்தியைக் கொண்டு சென்று, அதை துணியாக்கி மீண்டும் இங்கேயே கொண்டு வந்து விற்பதன் மூலம் பெரும் லாபம் சம்பாதித்தனர் ஆங்கிலேயர்கள். இந்த பருத்தி வியாபாரத்திலும் நகரத்தார்கள் முன்னணியில் இருந்தனர்.

1815-ல் மதுரையிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நரசிங்கம்பட்டியில் அர்ஜுன பெருமாள் அம்பலக்காரர் என்பவரின் வீடு இருந்தது. பருத்தி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நகரத்தார்கள் இந்த வீட்டில் கூடினார்கள். இங்கிருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று, பருத்திகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான ஆர்டர்களை பெற்று வந்தார்கள். இப்படி செய்து வந்த வியாபாரத்தில் 743 வராகன்கள் லாபம் கிடைத்ததாக இங்கிருந்து கிடைத்த பனையோலைகள் சொல்கின்றன. இந்த லாப பணத்தை வைத்து நரசிங்கம்பட்டியில் பொதுக்கிணறு ஒன்றும் வெட்டப்பட்டது. இந்த கிணறானது 'நகரத்தார் ஊரணி’ என அழைக்கப்பட்டது.

இப்படி பல்வேறு பிஸினஸ்களை நகரத்தார்கள் வெற்றிகரமாகச் செய்துவர, அவர்களிடம் நிறைய பணம் சேர ஆரம்பித்தது. பிஸினஸுக்குப் போக மேலதிகமாக உள்ள இந்த பணத்தை வேண்டும் என்பவர்களுக்கு கடனாக தரும் வழக்கமும் நகரத்தார்கள் செய்ய ஆரம்பித்தனர். குறுநில மன்னர்களாக இருந்தவர்கள் பாதுகாப்புப் படைகளுக்கான செலவு செய்யவும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த செல்வந்தர்களிடம் கடன் வாங்கினார்கள். இந்த கடனை திரும்பத் தரமுடியாதவர்கள், தங்கள் ஆட்சி எல்லைக்குட்பட்ட சில கிராமங்களையே கொடுத்தனர். ராமநாதபுர மன்னர் சேதுபதி வாங்கிய கடனை திரும்பத் தரமுடியாததால் சில மாகாணங்களை தந்ததாகச் சொல்கிறது வரலாறு.

இந்த காலகட்டத்தில் பர்மாவை ஆங்கிலேயர்கள் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தனர். பர்மாவுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் கொல்கத்தா வழியாக செல்ல ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து பர்மாவிலும் காலடி எடுத்து வைத்தனர் நகரத்தார்கள். 1870 முதல் 1930 வரையிலான 60 ஆண்டுகளில் தமிழகத்திலும் இலங்கை, பர்மா போன்ற வெளிநாடுகளிலும் நகரத்தார் பெரும் பணம் சேர்த்தனர்


Sunday, 14 July 2013

NAGARATHAR KOVILGAL

Nagarathars can be divided into nine major Kovils - Ilayatrangudi, Iluppakudi, Iraniyur, Nemankovil, Pillaiyarpatti, Soorakkudi, Vairavangovil, Velangudi and Mathur. This originated from the time that the Pandiya kings gave them nine villages around Pudukottai to settle in. They built a Shiva temple at each village and those living in the same village were considered brothers and sisters and don't inter-marry except in certain exceptions.

Ilayatrangudi 

The Ilayatrangudi Kovil is dedicated to Arulmigu Kailasanathar and his consort Arulmigu Nithyakalyani and lies 25 kms from Karaikudi. This place was considered the resting place for the Gods and derives its name from the Tamil word Ilaippu which means tiredness. The members of this Nagarathar Kovil are further sub divided in Pirivus (Classifications) like Okkurudaiyur, Arumbarkkuilaiyaraana Pattinasaamiyar, Perumaruthurudaiyar, Kazhanivaasarkkudiyaar and the Sirusenthurudaiyar. Those in Ilayatrangudi intermarry amongst the different pirivus within their Kovil and outside.

Iluppakudi 

The Iluppakudi Kovil is dedicated to the deity Arulmigu Thaanthonriyeesar and his beautiful consort Arulmigu Soundharanaayagi and lies 3 kms from Karaikudi. The beautiful Nagarathar temple is surrounded by Illupai trees and derives its name from them. The lingam here has been naturally formed. According to a legend, a local chieftain saw Lord Siva in his dream and was asked to build a temple. He was gifted with a Soodamani (a precious stone) by him and then started this divine task. The architecture is superb and the temple is adorned with artistic sculptures and paintings. There are no sub-divisions or Pirivus here.

Iraniyur 

The Iraniyur Kovil is dedicated to Arulmigu Aatkondanathar and his consort Arulmigu Sivapurandevi. It lies 24 kms from Karaikudi. Vishnu vanquished Iranian here and worshipped the Lord and the temple derives the name from this. Members of Iraniyur Kovil treat Pilliyarpatti as their brother Kovil and do not inter-marry. This Nagarathar temple is a magnificent piece of South Indian architecture.

Nemangovil 

The Nemangovil is dedicated to Arulmigu Jayangonda Choleeswarar and his consort Arulmigu Soundharanayagi. It lies 12 kms from Karaikudi and derives its name from the word Neamam or rules. This Nagarathar temple features over 125 beautiful sculptures. There are no Pirivus here.

Pillaiyarpatti 

The Pillaiyarpatti Kovil is dedicated to Arulmigu Thiruveesar, Arulmigu Marutheesar, Arulmigu Karpagapillaiyar, Arulmigu Sivakam and Arulmigu Vadamalarmangai. The Pillaiyar here is famous all over the globe and the unique feature of this temple is that it has been completely built inside a rock. It lies 14 kms from Karaikudi. There are no Pirivus (sub-classifications) among Nagarathar members here. They do not intermarry with Iraniyur Kovil members whom they consider brothers.

Soorakkudi 

The Soorakkudi Kovil is dedicated to Arulmigu Desikanathar and his consort Arulmigu Aavudainayaki. It lies 10 kms from Karaikkudi. This Nagarathar temple derives its name from the Soorai trees that surround it. The unique feature here is that the Amman here is the only one with three eyes and four arms. There are no Nagarathar Pirivus here.

Vairavangovil 

The Vairavangovil is dedicated to Arulmigu Valarolinathar and his consort Arulmigu Vadivudaiyammai. It lies 15 kms from Karaikudi. It is adorned with many beautiful classical paintings including the ten avatars of Vishnu, the presiding deities and the Pandavas. Its members are of three major Pirivus or sub-classifications like Sirukulathoorudaiyar, Kalanivasaludaiyar and Maruthendhirapuramudaiyar. The Sirukulathoorudaiyar Pirivu is further sub-divided into Periya Vahuppu, Theivanayahar Vahuppu and Pillaiyar Vahuppu.

Velangudi 

The Velangudi Kovil is dedicated to Arulmigu Kandeeswarar and his consort Arulmigu Kamatchiyammai. It lies 9 kms from Karaikudi. Its members have no Piruvus (Sub-classification). The population here is very low and this is believed to be the result of an ancient curse.

Mathur 

The Mathur Kovil is dedicated to Arulmigu Ainootreeswarar and his consort Arulmigu Periyanaayagi. Besides their idols, this Nagarathar temple also contains sculptures of Ramakrishna Paramahamsa, Vivekananda and Ramana Maharashi. The unique feature of this temple is the stone lions with freely rotating balls in their mouths. The towering Rajagopuram stands nearly 70 feet tall. It has seven Pirivus (sub-classifications) like Uraiyur, Arumbakkur, Manalur, Mannur, kannur,Karuppur and Kulathur. They inter-marry within these Pirivus in the Kovil and other Kovils as well. It lies 5kms away from Karaikudi.


செட்டிநாட்டு வீடுகள்

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கும் செட்டிநாட்டின் பெருமையைக் கூறும் வீடுகளை பற்றி பார்க்கலாம்.நாட்டுக்கோட்டை நகரத்தார்களே செட்டியார்கள் எனப்படுவர். அவர்கள் கட்டிய வீடுகளே இன்று சிவகங்கை மாவட்டத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. இந்த செட்டிநாட்டு வீடுகள் பெரும்பாலும் பர்மா தேக்குகளாலும், ஆத்தங்குடி கற்களாலும் கட்டப்பட்டவை. இவர்கள் பர்மாவில் வணிகம் செய்துவந்த காரணத்தால் பர்மாவில் இருந்து தேக்குகள் இறக்குமதி செய்யப்பட்டு கட்டப்பட்டவை. இந்த வீடுகள் அனைத்தும் 1980 ஆம் ஆண்டுக்கு முன்னரே கட்டபட்டவை. இப்போதெல்லாம் இந்த வீடுகளை போல கட்ட நினைத்தால் கோடிக்கணக்கில் செலவாகும். அந்தக் கால்த்தில் சில ஆயிரம் ரூபாய் செலவில் கட்டி முடித்துவிட்டார்கள் நகரத்தார்கள், இன்று இந்த வீடுகளின் மதிப்பு கோடிகளில்.....

இந்த வீடுகளின் அமைப்பை பற்றி சொல்ல வேண்டும் என்றால், இவை அனைத்தும் செவ்வக வடிவில் கட்டப்பட்டுள்ளன. நீங்கள் வீட்டின் முன் கதவில் நின்று பார்த்தால் வீட்டின் கடைசிவரை தெரியும். சில வீடுகளின் முன் வாசல் ஒரு தெருவில் இருக்கும் பின் வாசல் இன்னொரு தெருவில் இருக்கும். புரியும் படியாக சொல்லவேண்டும் என்றால் parallel streets இன் நடுவே இந்த வீடுகள் அமைந்திருக்கும்.

வீட்டின் முகப்பில் வாசலுக்கு இருபுறமும் திண்ணை இருக்கும். இந்தக் காலத்துக்கேற்ப சொல்லவேண்டும் என்றால் திண்ணை = வரவேற்பரை. இருபுறத்திலும் உள்ள திண்ணைகளில் ஒருபுறத்தில் சேமிப்பு அறை, இன்னொரு புறத்தில் கணக்குப்பிள்ளையின் அறை, வீட்டிற்கு முன்னால் கேணிகள் ,திண்ணையின் அருகே கலைநயமிக்க சிற்பங்களுடன் கூடிய மரத்தால் ஆன கதவுகள் என கலை மிகுந்த கட்டிடமாக விளங்குகின்றன இந்த வீடுக்ள்.

இந்த கதவை தாண்டிச் சென்றால் வெட்டவெளியான இடம் இருக்கும். இந்த இடத்தைச் சுற்றிலும் பல அறைகள் இருக்கும். இந்த அறைகளை தனது பிள்ளைகளுக்கு திருமணம் நடந்தவுடன் பரிசாக கொடுத்துவிடுவார்கள். இப்போது வீட்டையே பரிசாக கொடுக்கின்றனர். இதையும் தாண்டிச் சென்றால் இரண்டாம் கட்டு என்ற அமைப்பு உள்ளது - உணவு உண்ணும் அறை. இதையும் தாண்டினால் மூன்றாம் கட்டு மற்றும் நாலாம் கட்டும் அதற்கு பின்னர் தோட்டமும் இருக்கும். இதில் மூன்றாம் கட்டு பெண்கள் ஒய்வெடுப்பதற்காக பயன்படுத்தபடுகிறது. நாலாம் கட்டு - சமையலறை. தோட்டத்தில் கிணறும் ஆட்டுக்கல்லும் இருக்கும். அதாம்பா க்ரைண்டர். பல வீடுகள் மாடியுடன் கட்டப்பட்டிருக்கும். மாடி முழுவதும் அறைகள் இருக்கும். சாமான்களை சேமிப்பதற்காக! வீடு முழுவதும் சன்னல்களும் தூண்களும் நிறைந்திருக்கும்.

இந்த வீடுகளின் சுவர்கள் முழுவதும் சிறப்பான கலவை கொண்டு பூசப்பட்டுள்ளது. இந்த கலவை முட்டை ஓடுகள், எலுமிச்சை சாறு, வாசனை பொருட்கள் போன்ற பலவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இந்த கலவை கொண்டு சுவர்கள் பூசப்படுவதால் வீடு வெயில் காலங்களில் கூட குளிர்ச்சியாக இருக்கும். இந்த கலவையை குளிர்சாதனப் பெட்டிக்கு ஒப்புமைப் படுத்தலாம். இந்த கலவையைப் பயன்படுத்துவதால் சுவர்கள் பொலிவுடன் விளங்குவதோடு சுத்தப்படுத்துவதற்கு எளிதாகவும் இருக்கிறது. இந்த வீடுகள் மிக உயரமாகவும் , காற்றோட்டம் நிறைந்ததாகவும் இருக்கின்றன. இந்த வீடுகளின் தரைகள் சிமெண்டால் பூசப்பட்டு பின்னர் வண்ணமாக்கப்பட்டுள்ளன. சில வீடுகளின் தரைகள் ஆத்தங்குடி கற்களால் கட்டப்பட்டவை.

இந்த வீடுகளின் நடுவில் இருக்கும் வெட்டவெளியான இடம் வெளிச்சத்தையும் காற்றோட்டத்தையும் வழங்குகிறது. இந்த இடம் மூலம் மழை நீரை சேமிக்கலாம். அதாவது மழை பெய்யும் போது தண்ணீர் இந்த இடத்தில் விழுந்து கொடுக்கப்பட்டிருக்கும் வழியே சென்று சேமிக்கப்படுகிறது. இந்த வழியை மழை பெய்யாத காலங்களில் அடைக்க அதெற்கென்று செதுக்கப்பட்ட கல் உபயோகப்படுத்தப்படுகிறது. பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் பெல்ஜியம் கண்ணாடிகளால் ஆனவை.


அப்படி என்ன இந்த வீடுகளுக்குள் இருக்கும்? அரிய மரச்சாமான்கள், பித்தளைச் சாமான்கள், ஓலைகளால் ஆன கலைப் பொருட்கள் போன்றவை இருக்கும்.. அதற்கும் மேலாக செட்டிநாட்டு உணவு வகைகளை ஒரு கை பிடிக்கலாம். உணவு வகைகளை பற்றி குறிப்பிடும் போது நொருக்குத் தீனிகளைப் பற்றியும் சொல்ல வேண்டும்.. செட்டிநாட்டுக்கு என்றே நொருக்குத்தீனிகள் இருக்கின்றன, உதாரணமாக சிலவற்றைக் குறிப்பிடுகிறேன். உக்காரை , கந்தரப்பம், கருப்பட்டி பணியாரம், வெள்ளைப் பணியாரம் , கவுனியரிசி , பால் பணியாரம் , தேன்குழல் , சீப்பு சீடை, மனகோலம் போன்ற என்னற்றவை இங்கு பிரபலம். சிலவற்றை நாம் அறிந்திருக்கக்கூட முடியாது. இந்த உணவு வகைகள் அனைத்தும் சுவையுடன் இருப்பது மட்டுமல்லாமல் நம்மை சாப்பிடத் தூண்டுபவை.

பனை ஓலைகளைக் கொண்டு பல வடிவங்களில் பெட்டிகளை கையால் செய்து உபயோகப்படுத்துகின்றனர். இந்த பெட்டிகள் பல வண்ணங்களில் பல வடிவங்களை இருக்கின்றன. ஒய்வு நேரங்களில் இவர்கள் செய்த எம்ப்ராயடரி இன்று வீடுகளில் காட்சிப் பொருட்களாக விளங்குகிறது. எம்ப்ராயடரி என்றால் தற்போது உள்ளது போல அல்ல! வெறும் x வடிவத்தில் துணி முழுவதையும் வண்ண நூல்களால் நிறப்பி உருவாக்கியுள்ளனர். பித்தளைப் பாத்திரங்கள் எல்லாம் பெரிது பெரிதாய் நிற்கின்றன் இந்த வீடுகளில்.. மரச் சாமாண்கள் கலை நயத்தோடு சிறிதும் பெரிதுமாக இருக்கின்றன. அனைத்தும் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. முன்னாட்களில் செட்டிநாட்டுத் திருமணங்கள் திருவிழா போல் ஒரு வாரம் நடைபெற்றன என்று கூறுவர், ஆனால் இப்போது வெறும் மூன்று நாட்களே நடைபெறுகின்றன. கீழுள்ள வீடியோவைப் பார்த்து செட்டிநாட்டுத் திருமணங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

குறிப்பு : இந்த வீடுகள் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை, கானடுகாத்தான், பள்ளத்தூர், ஆத்தங்குடி, சிவகங்கை, நாட்டரசன்கோட்டை போன்ற ஊர்களில் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த இடம் என கூறமுடியாது. இந்த ஊர்களுக்கு சென்றால் நிச்சயம் செட்டிநாட்டின் வீடுகளை காணலாம்இந்த வீடுகளில் சில வீடுகள் மற்றுமே சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. நீங்கள் மற்ற வீடுகளை காண வேண்டும் என்றால் அனுமதி பெற வேண்டும். மேலும் சிலவற்றை சுற்றுலாத் தளமாக ஆக்க சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

சுற்றுலாத் தளமாக்கப்பட்ட சில வீடுகள்:

1)S.A.R Muthiah house.  2)Muthiah chettiar, raja of chettinad - kanadukathan.  3)Muthiah's brother house - kanadukathan.  4)athangudi Muthupattinam house - Attangudi  5)Karaikudi 1000 window house - Karaikudi
outer view

outer view of our chettinad houses